பெரம்பலூர் அருகே குடும்ப பிரச்சினையில தந்தையை அடித்துக் கொன்ற மகன்
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியைச் சேர்ந்தவர் வரதராஜ்( 60)விவசாயி.இவரது மகன் ராஜா(35) நெல் அறுவடை மிஷின் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்,ராஜாவுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்,
வரதராஜனும், ராஜாவும் ஒரே வீட்டில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தனர்,இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இன்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது,
இதில் ஆத்திரமடைந்த ராஜா தந்தை வரதராஜனை தலையில் கடுமையாக தாக்கி உள்ளார், படுகாயம் அடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து சென்று வரதராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து தந்தையை அடித்துக் கொன்ற மகன் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.