நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்: உற்சாக வரவேற்பளித்த முன்னாள் மாணவர்கள்
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து சென்ற முன்னாள் மாணவர்கள் .
HIGHLIGHTS
பெரம்பலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து சென்ற முன்னாள் மாணவர்கள்.
செப்டம்பர் 05ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 6 ஆசிரிய பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம் அம்மா பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ராமர் என்பவரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஒருவர்.
இந்நிலையில் விருது பெற்ற நல்லாசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் அம்மாபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி வரை தாரை தப்பாட்டை முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் வரவேற்பும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தப்பாட்டம் அடித்த மாணவர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற ராமர் ஆசிரியரால் தப்பாட்டம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.