Begin typing your search above and press return to search.
சலூன் கடைகளை திறக்க கோரிக்கை -தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கத்தினர் மனு
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் சலூன் கடைகளை திறக்க அனுமதிகோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வால் தங்கள் முடிதிருத்தும் நிலையங்களுக்கு எந்தவித தளர்வுகள் வழங்கப்படாதது வருத்தமடையச் செய்துள்ளதாகவும், இதனால் வருவாய் இன்றி தினமும் அல்லல்பட்டு வருதாக தெரிவித்தனர்.
மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரடங்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சலூன் நிலையங்களை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.