/* */

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
X

பெரம்பலூர் அருகே விபத்தில் இறந்த வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் பிரவீன் குமார். திருவளக்குறிச்சியில் உள்ள தனியார் கிரஷரில் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருவளக்குறிச்சியிலிருந்து மருதடி செல்லும் போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், என்றும் சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 11 Sep 2021 2:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...