Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் 64 -வது குரு பூஜை விழா.
பெரம்பலூர் மாவட்டத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 64-வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
பொரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64 வது குரு பூஜை விழாவை முன்னிட்டு கொடியேற்றி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக நக்கசேலம் ஈச்சம்பட்டி திருவள்ளுவர் தெருவில் தேவேந்திர குல வேளாளர்கள் கொடியேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் 300 க்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குரு பூஜை விழாவில் புதிய தமிழகம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலாஜிதேவேந்திரன் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நக்கசேலம் மதியழகன் அம்மாபாளையம் சரவணன் , சங்கர் , ஜோதிவேல் ஆகியோர் முன்னிலையில் வீர வணக்கம் செலுத்தினர்.