/* */

பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

பெரம்பலூரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பொன் கலியபெருமாள் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிசிச்சை பலன் இன்றி இறந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி
X

கருப்பு பூஞ்சை (பைல் படம்)

பெரம்பலூரைசேர்ந்த பொன்கலியபெருமாள் அதிமுக முன்னாள் ஒன்றியசெயலாளர் ஆவார்.கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே போல் குன்னத்தை சேர்ந்த லெனின் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது பொதுமக்களிடையே நோய்தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 May 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?