/* */

நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலர்

நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலர்
X

நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நாய்கள் கூட்டமாக சேர்ந்து குரங்கு ஒன்றை கழுத்து கை பகுதிகளில் கடித்ததில் மரத்தில் தாவ கூட முடியாமல் மயங்கி விழுந்தது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குரங்கை அந்த பகுதியை சேர்ந்த பிரபு என்னும் ஓட்டுநர் தொழில் செய்து வரும் சமூக ஆர்வலர் முதலுதவி செய்யும் வகையில் தனது மூச்சை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.

சற்றும் யோசிக்காமல் உடனே முதலுதவி செய்து பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்யப்பட்டு குரங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அடுத்த நாள் குரங்கு இறந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக பிரபு கூறினார்.

Updated On: 12 Dec 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?