/* */

வேப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்

குன்னம் அருகே உள்ள வேப்பூரில் புதிய மின்மாற்றியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வேப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்
X

வேப்பூரில் புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் புதிய மின்மாற்றியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார்.

குறைந்த வோல்டேஜ் மின்சாரம் மட்டும் வருவதால் இதனால் வீடுகளில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறிகள், டிவி உள்ளிட்ட எந்த ஒரு மின்சார பொருளும் இயக்க முடியவில்லை. அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டாரையும் இயக்க முடியவில்லை. புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட வேண்டும் என்று விவாசாயிகளின் கோரிக்கையின் பேரில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 55 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் பேரில் 63கிலோ வாட் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் ரூ.6,62,830 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி வேப்பூரில் அமைக்கப்பட்டது. அதனை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார். இதே போல கல்லை, மழவராயன்நல்லூர், காருகுடி, அந்தூர், ஆகிய கிராமங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்பார்ம்களை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி மின் பொறியாளர் லதா,வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லபிள்ளை, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தனம்பெரியசாமி, மாநில தலமை பொதுகுழு உறுப்பினர் வேட்டகுடி ராஜேந்திரன், முன்னால் சேர்மேன் நீலமேகம், ஒன்றிய இளைஞர் அணிசெயலாளர், பிராகரன், உட்பட கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய களப்பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Nov 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்