/* */

பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை

பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்  நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
X

 நகை திருடு போன நகைப்பட்டறை.

பெரம்பலூர் நகரில், சிவன் கோயில் பின்புறம் தேரடி வீதியில், காசி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இதில் பாலசுப்பிரமணியம் என்பவர், நகை செய்யும் பட்டறையை, ஆறு வருடங்களாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு மாலையில், நகைக்கடை பட்டறைக்கு வந்து பார்த்தபோது, கடை பூட்டை உடைத்து உள்ளே இருந்த 4 பவுன் நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...