/* */

பெரம்பலூர் பகுதியில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் பகுதியில்  பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பெரம்பலூர் நகரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் மலைப்பிரதேசங்களை போன்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

இந்த கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர். மேலும் பெரம்பலூரை ஒட்டிய திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிக பனிமூட்டம் நிலவியதை தொடர்ந்து வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது.

Updated On: 23 Jan 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு