/* */

சபரிமலை அன்னதானத்திற்கு இரண்டரை டன் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு இரண்டரை டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சபரிமலை அன்னதானத்திற்கு இரண்டரை டன் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு
X

அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கேஆர்வி கணேசன் கொடி அசைத்து வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மலையப்பநகர் பிரிவு அருகே அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. ஐய்யப்ப பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் சார்பில் நடைபெற்று வரும் இந்த அன்னதானத்தில் தினமும் நூற்றுக்கணக்காணோர் உணவருந்தி செல்கின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பது என முடிவெடுத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக அஸ்வின்ஸ் குழுமம் சார்பிலும், ஐய்யப்ப பக்தர்கள் சார்பிலும் சுமார் இரண்டரை டன் உணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து சேகரித்த உணவு பொருட்கள் இன்று வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கேஆர்வி கணேசன் கொடி அசைத்து வாகனங்களை வழியனுப்பி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது .இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கத்தின் பெரம்பலூர் யூனியன் பொருப்பாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்