/* */

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு

பெரம்பலூர் செட்டிக்குளத்தில், மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு
X

செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம்,  மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் (பொ) வாணி மற்றும் அவரது குழுவினர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் மது விற்பது, காய்ச்சுவது, ஊறல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்த தகவலை 10581 என்ற இலவச எண்ணிற்கு தெரிவிக்கலாம், அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம். இரகசியம் காக்கப்படும் என்று கூறியும், பொது மக்களிடம் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Updated On: 29 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...