/* */

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு போட்டி

தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு போட்டி

HIGHLIGHTS

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு போட்டி
X

இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஜனவரி-25 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்பேரில் வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும், கல்வியும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9 முதல் 12 வகுப்பு பள்ளி மாணாக்கர் அளவிலும், கல்லூரி அளவிலும் தேர்தல் தொடர்பான கருத்துருக்களை மையமாக கொண்டு ஓவிய போட்டிகள், சுவரொட்டி உருவாக்கம் செய்தல், ஒரு வரி முழக்கம் உருவாக்கம், பாட்டு போட்டி, குழு நடன போட்டிகள் மற்றும் கட்டுரை போட்டிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் எதிர்வரும் 15.12.2021 அன்று துவங்கி 25.12.2021 அன்று வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

இது தவிர 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 'ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு" என்ற தலைப்பில் தமிழில் 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் தங்களது ஒரு பக்க கட்டுரையை எழுதி www.elections.tn.gov.in/sveep2022/ என்ற இணைய முகவரியில் 26.12.2021-க்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், இந்த தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Dec 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்