/* */

குன்னூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை; கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

Nilgiri News, Nilgiri News Today- குன்னூரில், விதிமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு, ரூ. 25,500 அபராதம் விதித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

குன்னூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை; கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
X

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பேனர் ( கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாட்டில், பிளாஸ்டிக் வாழை இலைகள், தோரணம்-கொடிகள் உள்ளிட்ட 19 வகை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலங்களாக இருப்பதால், சீசன் காலகட்டத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஸம்மர் சீசனில் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை, பல லட்சங்களாக உள்ள நிலையில், மாவட்டத்தின் தூய்மையை பாதுகாக்கவும், இயற்கை சூழலை பராமரிக்கவும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனாலும் இதனை பெரும்பாலான வியாபாரிகள் தடை விதித்தலை மதிக்காமல், விதி மீறி அலட்சியமாக செயல்படுவதாக புகார்கள் வந்தன. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு சிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார். தலைமையில் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர், ஆப்பிள் பி பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கவோ பயன்படுத்தவோ கூடாது. அப்படியான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 3 Aug 2023 1:07 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!