/* */

குன்னூரில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை; விரைவில் அமல்படுத்த முடிவு

Nilgiri News, Nilgiri News Today- குன்னூரில் விழாக்களில் பிளாஸ்டிக் பூக்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குன்னூரில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை; விரைவில் அமல்படுத்த முடிவு
X

Nilgiri News, Nilgiri News Today- பிளாஸ்டிக் பூக்களுக்கு, விரைவில் தடை விதிக்க குன்னூரில் முடிவு (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று மன்ற அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பாக மாதாந்திர மதிப்பூதியம் உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரமும், துணைத் தலைவருக்கு ரூ. 10 ஆயிரமும் நகரமன்றத் தலைவருக்கு ரூ.15 ஆயிரம் ஒதுக்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் விவாதம் நடந்தது.

தி.மு.க. கவுன்சிலர் ராமசாமி பேசும்போது, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் முறையாக பணிகளை செய்யாததால், பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்து. இதுகுறித்து, பலமுறை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களிடம் கூறியும் முறையாக பணிகளை செய்யாததால் மக்கள் பாதிப்பதாக குற்றம் சாட்டினர்.

குன்னூர் மார்க்கெட் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் முறையாக நுழைவுவாயில் கேட்டுகள் இல்லாமல் உள்ளது. பல கட்டிடங்கள் இடியும் அபாய நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றார்.

கவுன்சிலர் ஜாகீர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உள்ள நிலையில், திருமணம் மற்றும் விழாக் காலங்களில் பிளாஸ்டிக் பூக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும், என்றார்.

இதற்கு பதிலளித்து கமிஷனர் ஏகராஜ் பேசுகையில், நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அடுத்த மாதத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்வதாக, தெரிவித்தார். இதையடுத்து, மிக விரைவில் குன்னூரில் பிளாஸ்டிக் பூக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தடை நடைமுறைக்கு வர உள்ளது.

Updated On: 28 July 2023 3:16 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!