/* */

கூடலூரில் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூர் பாண்டியாறு ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கூடலூரில் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் பரபரப்பு
X

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆறு உள்ளது. இந்த ஆற்றில் அழுகிய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர். அழுகிய நிலையில் இருந்ததால் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 3 July 2021 9:09 AM GMT

Related News