/* */

18 பேரை கடித்து குதறிய வெறிநாய்-நாகையில் பரபரப்பு

நாகப்பட்டினத்தில் 18 பேரை வெறி நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கியது. பொதுமக்கள் சுதாரிப்பதற்குள் 10 க்கும் மேற்பட்டவர்களை கடித்து விட்டு நீதிமன்ற வளாகம், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை என நிற்காமல் ஓடிய அந்த வெறி நாய் அது செல்லும் வழியெல்லாம் நின்று கொண்டிருந்தவர்களையும் கடித்தது. இதில் 2 பெண்கள், ஒரு சிறுவன் முதியவர்கள் 2 பேர், நீதிமன்ற ஊழியர் என 18 பேரை கடித்து குதறிய அந்த வெறி நாய் பேருந்து நிலையத்தில் இருந்த கடைக்குள் நுழைந்தது.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் 18 பேரை கடித்து குதறிய அந்த வெறிநாயை லாவகமாக பிடித்து அடித்துக் கொன்றனர். இந்நிலையில் வெறி நாய் கடித்து 18 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த நாகை அதிமுக வேட்பாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான தங்க.கதிரவன் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பொதுமக்கள் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வெறிநாய் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

Updated On: 12 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...