Begin typing your search above and press return to search.
நாகப்பட்டினம் கொரோனா நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து கிட் வழங்கிய ரோட்டரி கிளப்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஊட்டச்சத்து கிட்டை ரோட்டரி சங்கம் கலெக்டரிடம் வழங்கியது.
HIGHLIGHTS
நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் பயனடையும் வகையில் 500 சிறப்பு தொகுப்புகள் அடங்கிய பைகளை ரோட்டரி கிளப் நாகை நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை நேரில் சந்தித்து இன்று வழங்கினார்.
கொரோனா கிட்டில் கடலை மிட்டாய், முந்திரி, பாதாம், எண்ணெய், பிஸ்கட், உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம்பெற்று இருந்தன.
தொடர்ந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கொரோனா கிட் வழங்க முயற்சி மேற்கொள்வதாக ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆட்சியரிடம் உறுதி அளித்தனர்.