Begin typing your search above and press return to search.
நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்
நாகையில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மாநில வாணிப கழகம், திருச்சி பறக்கும் படையினர் கடந்த மாதம் 23ம் தேதி நாகை நகர டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நாகை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடை எண் 5605-ல் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடை மேற்பார்வையாளர் பொறுப்பு வகித்த ரவி மற்றும் விற்பனையாளர்கள் முத்தரசன், தேவிசயாள் பிள்ளை ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நாகை மாவட்ட மேலாளர் ரவி இன்று உத்தரவிடப்பட்டார்.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவி எச்கரிக்கை விடுத்துள்ளார்.