/* */

கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க கோரி நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்

கேரள கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டு தரக்கோரி நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க கோரி நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்
X

நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தினால் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகூரை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த 30, ஆம் தேதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் படகில் இருந்த 11, மீனவர்கள் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். ஆனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகும், வலைகளும் மீட்க முடியாமல் கடலில் மூழ்கி கிடக்கிறது.

இதனிடையே கேரளா கடலில் மூழ்கி கிடக்கும் விசைப்படகினை மீட்கக்கோரி நாகூர் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாகூர் வெட்டாறு துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கொச்சி துறைமுகம் அருகே கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகை மீட்காவிட்டால் அது உருக்குலைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி மீனவர்கள், தமிழக அரசு கேரள அரசுடன் பேசி மூழ்கிக் கிடக்கும் வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டு தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 6 Oct 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்