/* */

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல்

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகையில் தாரை தப்பட்டை முழங்க குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல்
X

நாகையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் மன்றத்தினர் குத்தாட்டம் போட்டனர்.

நாளை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் இன்று களைகட்டியது. அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகள் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ, விஜய் மக்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 7,8,13 உள்ளிட்ட 10 வார்டுகளில் விஜய் மக்கள் மன்றத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்த அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு குத்தாட்டம் போட்டனர். விஜய் மக்கள் மன்றத்தினர் அலுவலகம் முன்பு குத்தாட்டம் போட்டதால் மேளதாளத்தை நிறுத்தி போலீசார் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 3 Feb 2022 4:58 PM GMT

Related News