Begin typing your search above and press return to search.
சிறைக்கும் அஞ்சமாட்டேன் இ.கம்யூ.,முத்தரசன் காட்டம்
நாகை அடுத்த திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாகை அடுத்த திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை எம்.பி செல்வராசு மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் வளர்ச்சிக்காக சட்டமன்ற தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ள திருமருகல் ஒன்றியம் சார்பாக இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய முத்தரசன் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தன்னை சிறையில் அடைத்தாலும் பயப்பட மாட்டேன். சிறையிலும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தார்.