/* */

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
X

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை விவசாயம் செய்த விவசாயிகள் ஊடு பயிர்களான உளுந்து பயிர், பாசி பருப்பு சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் பருவம் தப்பி பெய்த கனமழை காரணமாக உளுந்து பயிர்கள் மழைநீர் சூழ்ந்து நாசமானது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் பாலையூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், மீனம்பனல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிர்கள் நாசமானது.

இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாகை மாவட்டம் முழுவதும் பருவம் தப்பிய கனமழை காரணமாக 40 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விளைச்சலின் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், பொது பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்/

Updated On: 29 April 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து