Begin typing your search above and press return to search.
வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஊத்தங்கரை வழியாக குட்கா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ரோட்டில் பிடிஓ அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ரூ.72,000/- மதிப்புள்ள 72 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலை பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.