/* */

ஓசூரில் திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்: குழந்தையுடன் தப்பித்த ஓட்டுநர்

ஓசூரில் எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றியதில் குழந்தையுடன் ஓட்டுநர் தப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஓசூரில் திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்: குழந்தையுடன் தப்பித்த ஓட்டுநர்
X

தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்.

பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருபவர் சதீஷ் (வயது 29 ). இவர் தமிழகத்தின் ஓசூர் புறநகர் பகுதியில் உள்ள ஜூஜூவாடியிலிருந்து ஓசூர் செக்போஸ்ட் ரிங் ரோடு அருகே உள்ள உப்கார் லேஅவுட் 3வது கிராசில் தனது எலக்ட்ரிக் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்தது. இதில் ஒக்கினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எரிந்து நாசமானது.

இதில் சதீஷ் மற்றும் அவருடன் சென்ற அவருடைய மூன்று வயது மகனும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி தப்பினர். வாகனத்தின் முன் பகுதியில் வைத்திருந்த செல்போனும் மீட்கப்பட்டது.

தீயை அணைக்க அக்கம்பக்கத்தினர் அனைவரும் உதவினர். பின்னர் சதீஷ் சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த எலக்ட்ரிக் பைக் விற்பனையகத்தின் சர்வீஸ் டீம் வாகன உரிமையாளரின் ஆர்.சி. புத்தகம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வகானத்திற்கான ரூ.75000த்தை உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேதமடைந்த வாகனத்தை எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 30 April 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!