/* */

பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இரு பிரிவினர் இடையே மோதல்

மரணம் அடைந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாமிய இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இரு பிரிவினர் இடையே மோதல்
X

கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாத்தில் உள்ள முஸ்லீம்கள் கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவினராக செயல் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுல்தான் என்பவரது மனைவி ரொஹியாம்மாள் (76) காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய ஜாக் என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வாய்த்தகராறு முற்றி கை கலப்பாகாக மாறி. இரு தரப்பினரும் மோதி கொண்டனர்.

தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதோடு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மரணம் அடைந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Jun 2021 1:45 PM GMT

Related News