/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு
X

ஆக்கிரமிப்பு பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த்துறையினர்.

சென்னை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் திருப்பெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் பன்றி, ஆடு, கோழி பண்ணை நடத்தி வருகிறார்.

இவர், சர்வே எண்:367/3 ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து, புகாரின் பேரில் தண்டலம் குறு வட்டு வருவாய் ஆய்வாளர் விமல்ரோஸ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். உடன் கிராம் நிர்வாக அலுவலரும் சென்றிருந்தார்.

இந்நிலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியான பின், வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு இடத்திலுள்ள வேலிகளை ஜேசிபி உதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர்.

Updated On: 20 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!