/* */

மதுரமங்கலத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்!

மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கையுடன் கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மதுரமங்கலத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்!
X

மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்காக உருவாக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு, முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பரிசோதனை முடிவுகளில் குறைவான தொற்று உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

மேலும் சாதாரண கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தற்போது இங்கு 20 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 27 May 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!