காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ரதம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆர்த்தி உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்று , ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
HIGHLIGHTS
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தி தலைமையில் உலக மக்கள் தொகை தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்எம்.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்து மருத்துவர் மற்றும் செவிலியரின் உள்ளிட்டோருடன் இணைந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றார்.
அதன்பின் இத்தினத்தையொட்டி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2021 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 8.36 கோடி மக்கள் தொகை உள்ளனர். இதில் 4.19 கோடி ஆண்களும், 4.17 கோடி பெண்களும் உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் ஜீவா உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.