/* */

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து விஏஓக்கள் பணி புறக்கணிப்பு

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரின் போக்கை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து விஏஓக்கள் பணி புறக்கணிப்பு
X

வருவாய் கோட்டாட்சியரின் போக்கை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம், வாலாஜாபாத , உத்திரமேரூர் ஆகிய வட்டங்கள் அடங்கியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே வருவாய் கோட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களை காரணமின்றி வசை பாடுவதும் பொதுமக்கள் முன்னிலையிலேயே மிரட்டும் தோணியில் பேசுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கிராம நிர்வாக அதிகாரி திருக்கோயில் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையிலும் வருவாய் கோட்டாட்சியர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் மிரட்டும் தோணியில் நிர்வாக அலுவலர்களை பேசியதைக் கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து அறிந்து வெளியே வந்த வருவாய்க் கோட்டாட்சியர், இது குறித்து பேசுவதாக தெரிவித்துவிட்டு அரசு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகம் செல்வதை தவிர்த்துவிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயன்று வருகின்றனர்.

Updated On: 19 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!