வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி சண்முகம்..!
காஞ்சிபுரம் பொன்னேரிகரை அருகே அமைந்துள்ள அண்ணா அரசு பொறியியல் உறுப்புக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று அதன்பின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரி கரை அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 64 வாக்குகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ளது. 1932 வாக்குப்பதிவு மையங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்ப்பு ஆறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அந்தந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல் தளத்தில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையும், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மதுராந்தகம், உத்திரமேரூர், செய்யூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பெறப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் தளத்தில் உள்ள வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர், காவல்துறை பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ் பி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பதிவான வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் மையத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் , மூன்று காவல் ஆய்வாளர்கள் , 27 உதவி ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 45 சிறப்பு காவல் படை காவலர்கள் , 24 மத்திய பாதுகாப்பு காவலர்கள் என மொத்தம் 158 பேர் என மூன்று கட்ட பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார்.