காஞ்சிபுரம் அருகே இளைஞரை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம், போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம் அருகே சிவகாஞ்சி பகுதியில் இளைஞரை, நண்பர்கள் முன் விரோதம் காரணமாக கொன்று புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாயார் குலத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஐயப்பன் கடந்த மாதம் 26ஆம் தேதி நண்பரைக் காண சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காணாமல் போன நபர் குறித்து விசாரிக்க உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
இதில் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரை தீவிர விசாரணை மேற்கொண்டதில் தனது நண்பர்களான சோமாஸ் என்கிற செல்வம் , முருகன் , அபி மற்றும் குணா ஆகியோருடன் இணைந்து முன்விரோதம் காரணமாக ஐயப்பனை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .
மேலும் ஐயப்பன் உடல் முத்துவேடு என்ற பகுதியில் புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
உடலை தோண்ட வட்டாட்சியர் மற்றும் உடற்கூறு ஆய்வாளர் என அனைவரும் ஒருங்கிணைத்து நாளை உடல் தோண்டப்பட உள்ளது. காணாமல் போன இளைஞர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது