/* */

ஓரே நாடு, ஓரே தேர்தல், விரைவில் அதிமுக ஆட்சி, வைகை செல்வன் ஆரூடம்

ஓரே நாடு, ஓரே தேர்தல் வருகிறது, 2 வருடங்களில் அதிமுக ஆட்சி அமைய உள்ளது என்று வைகை செல்வன் காஞ்சியில் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஓரே நாடு, ஓரே தேர்தல், விரைவில் அதிமுக ஆட்சி,  வைகை செல்வன்  ஆரூடம்
X

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் வைகை செல்வன்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் கழக இலக்கிய அணி செயலாளர் பொன் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள்‌அமைச்சரும் , காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான வி.சோமசுந்தரம்‌ , சிறப்பு அழைப்பாளராக அதிமுக இலக்கிய அணி செயலாளரும், கட்சி செய்தி தொடர்பாளருமான வைகை செல்வன் கலந்து கொண்டார்.

இதில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வழிவகை செய்தல் , திமுக தேர்தல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே கண்டித்தல், பழிவாங்கும் நோக்கில் அதிமுகவின் மீது செயல்படுவதை கைவிட கோருதல் உள்ளிட்ட ஐந்து வகை தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய வைகைச்செல்வன் இன்னும் ஓரிரு வருடங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம், பஞ்சாட்சரம் , களக்காட்டூர் ராஜீ, பிரகாஷ்பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Aug 2021 12:30 PM GMT

Related News