புதிய தலைவர் மற்றும் நிர்வாகக்குழு பதவியேற்பு : திமுகவினர் வாழ்த்து
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவிற்கு திமுகவினர் மற்றும் பட்டு நெசவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
HIGHLIGHTS
பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் ஸ்ரீ முருகன் பட்டு கூட்டுறவு சங்கம். அதில் உள்ள பெரும் புகழ் பெற்று பல நெசவாளர்கள் தேசிய விருதுகள் பெற்றுள்ளனர்..
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இக்கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது.
இதனை ஆய்வு செய்த கூட்டுறவு தணிக்கை குழு முறைகேடு உறுதியாகியதால் நிர்வாக குழுவை கலைத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழு தேர்தல் அறிவிக்கப்பட்ட தில் தலைவரின் A.S. முத்துசெல்வன் மற்றும் துணை தலைவராக இளங்கோவன் உள்ளிட்ட 7 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவ்வகையில் தேர்வு செய்யபட்ட தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் இன்று முறைப்படி பொறுப்பேற்றனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட பிரதிநிதி சுகுமார் , நகர் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பூபாலன் , மலர்மன்னன், சந்துரு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ் , ஜெகநாதன் உள்ளிட்ட திமுகவினர் , நெசவாளர்கள் என ஏராளமானோர் சால்வை , மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.