/* */

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்

HIGHLIGHTS

பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு கேட்கும் முஸ்லிம் வேட்பாளர்
X

காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஷம்ஷாத் பெண்களுக்கு குங்குமம் அளித்து வாக்கு சேகரிக்கும் காட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைகள் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் பெண் முஸ்லிம் வேட்பாளரான எஸ்.ஷம்ஷாத் ஆசிரியர் நகர் , அரசு நகர் பகுதிகளில் காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி,பெண் வேட்பாளருக்கு குங்குமம் அளித்து காலில் விழுந்து ஆசி பெற்று வாக்கு சேகரித்து வருகிறார்.

முஸ்லிம் பெண் வேட்பாளர் அனைத்து பெண்களுக்கும் குங்குமம் அளித்த வாக்கு கேட்கும் நூதன முறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 9 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!