சிறுவாக்கம் : குளம் நிரம்பி உபரி நீர் வழிந்தோடி சாலைகளில் தேக்கம்
சிறுவாக்கம் கிராமத்தில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனுவில் அக் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி அம்மன் குளம் மற்றும் சங்கரன் குளம் தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பி உபரிநீர் வெளியேறி கிராம வீதிகளில் தேங்கி நிற்பதாகவும், பொதுமக்கள் பயன்படுத்தும் நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் வடிகால் வசதியின்றி தேங்கி நிற்கிறது.
குளித்தை சுற்றிலும் தற்காலிக பட்டா வழங்கப்பட்டு உள்ளதால் நீர் வெளியேற போதிய கால்வாய்கள் அமைக்க இயலவில்லை என்பதால் நீர் இவ்வாறு வெளியேறுகிறது எனவும், இதை முறையாக சிமெண்ட் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றப்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஏங்கி நிற்கும் நீரால் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிறது என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.