காஞ்சிபுரம் அருகே வாலிபர் அடித்து கொலை: போலீசார் தீவிர விசாரணை
காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஓரிக்கை கனேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் மோகன் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர் பாலாஜி உடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு வீடு திரும்பிய போது மிலிட்டரி சாலையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் மர்மநபர்களால் வழிமறிக்கப்பட்டு இருவரும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாலுகா காவல் துறையினர் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தபோது மோகன் இறந்துவிட்டதாகவும் பாலாஜி பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோகனுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் தற்போது அதன் அடிப்படையிலேயே இச் சம்பவம் நடைபெற்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.