/* */

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகாள் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய நவம்பர் 15ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகாள் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி
X

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.

கடந்த ஒரு மாத காலமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தற்போது வரை எழுபத்தி எட்டு ஏரிகள் தனது முழு கொள்ளளவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டியுள்ளது.

மழைப்பொழிவு, நீர்த்தேக்கம் உள்ளிட்டவைகளால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தங்களது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் தங்களது பயிர்களை பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து எதிர்பாராத பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாய கூட்டங்களில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது ராபி பருவத்தில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் நவம்பர் 15 ம் தேதிக்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 29 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்