காஞ்சிபுரம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!
காஞ்சிபுரம் மின் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தி மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில் தொழிற்சாலை பணியாளர்கள் , அரசு ஊழியர்கள் , மின் வாரிய பணியாளர்கள் என பல தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது வருகிறது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தலைமை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் 200 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கென சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உத்தரவிட்டத்தின் பேரில் இன்று அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மின் வாரிய ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை எழிலரசன் துவக்கி வைத்து ஊழியர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் , துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..