பொங்கல் தொகுப்பு: நேரில் வழங்கி வரும் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் 927 நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இனிப்புகளுடன் வழங்கபட்டன.
HIGHLIGHTS
தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான மளிகைப் பொருட்களை கடந்த திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், 5 நாட்களாக ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி குமார் கிராமங்கள் தோறும் சென்று, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.
அவ்வகையில் திருப்பருத்திக்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு நியாயவிலைக் கடைகளில் 927 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை இன்று வழங்கினார். இன்று நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அனைவருக்கும் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார், ஒன்றிய துணை செயலாளர் தசரதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி துணை செயலாளர் ஸ்டாலின், ராமமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.