காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி கைதா ? குழப்பும் காவல்துறை
காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாரா என்பது குழப்ப நிலையே உள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். திமுகவில் மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி ஷைலஜா, கோனரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 25ஆம் தேதி காலை 10 மணியளவில் மர்ம நபரால் வெட்டப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லும் வழியில் சேகர் உயிரிழந்தார்.
குற்றவாளியை கைது செய்ய 4தனிப்படைகள்அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காவல்துறையினர் இது குறித்து தகவல் உறுதி செய்யவில்லை.
அவரது பகுதியை வாலிபர் ஒருவரை தேடி வருவதாகவும் , அவர்களுக்குள் முன் விரோதம் இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உறுதியற்ற தகவல்களே பேசப்படுகிறது. கொலை குற்றவாளி கைது செய்யப்படமல் இருப்பது, உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை எவ்வித தகவல்களும் கிடைக்காததால் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.