காஞ்சிபுரம் : குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்
Kanchipuram to Chennai AC Bus-காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் இன்று முதல் சென்னை , தாம்பரம் , பெங்களூரு பகுதிகளுக்கு குளிர்சாதன பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
HIGHLIGHTS
Kanchipuram to Chennai AC Bus-தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு வருடங்களாக பொதுமக்கள் போக்குவரத்திற்காக குளிர் சாதன பேருந்துகளை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிகமாக சேவையை நிறுத்தி இருந்தது.
இந்நிலையில் தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் பரவல் குறைந்துள்ளதால் இன்று முதல் மீண்டும் குளிர்சாதன பேருந்து சேவை தொடங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்தது.
காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலம் சார்பில் கோயம்பேடு , தாம்பரம் , வேலூர் , பெங்களூரூ என பல வழித்தடங்களில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கி வந்தது.
தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை 5 மணி முதல் சென்னை கோயம்பேடு , தாம்பரம் , பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலுக்கு 10க்கும் மேற்பட்ட குளிர்சாதனைப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதில் 60 சதவீத பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
நாளை முதல் 100சதவீத பயணிகள் பயணம் மேற்கொள்ளுவார்கள் என போக்குவரத்து கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2