/* */

காஞ்சி ஒன்றியத்தில் 5 கிராம ஊராட்சிகளுக்கு செயலாளர் நியமனம் எப்போது ?

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் காலியாக உள்ள 5 ஊராட்சி செயலர்கள் பதவிக்கு, பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சி ஒன்றியத்தில்  5 கிராம ஊராட்சிகளுக்கு  செயலாளர் நியமனம்  எப்போது ?
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கியுள்ளது. அதில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 40 கிராம பஞ்சாயத்துக்களில் , ஊராட்சி செயலர்களை கொண்டு கிராம வளர்ச்சி பணிகள் மற்றும் செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராம பஞ்சாயத்துக்களுக்கு செயலர்கள் நேரடி பணியிலும், 5 ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 5 பஞ்சாயத்துக்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு பஞ்சாயத்து பணிகளை கண்காணித்து, பணிகளை செய்வதில் சிரமம் அடைகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அந்தந்த ஊராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர் பதவி காலியாக உள்ள ஐந்து பஞ்சாயத்துக்களுக்கு உடனடியாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும்.

ஒரு ஊராட்சி செயலாளர் ஒரே நேரத்தில் இரு கிராம தேர்தல் பணிகளை செய்வது என்பது இயலாத காரியம் ,சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் எழும் நிலையில்,

அங்கும் இங்கும் என செல்வது கடினம் எனவே விரைந்து ஊராட்சி செயலாளர் பதவிகளை தேர்தலுக்கு முன் நிரப்ப மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 17 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!