/* */

நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கான நேர்காணல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 நியாய விலைக் கடை 114 விற்பனையாளர்கள், 160 கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்காணல் துவங்கியது.

HIGHLIGHTS

நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கான நேர்காணல்
X

காஞ்சிபுரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள நியாய விலை கடை விற்பனையாளர் , கட்டுநர் பணிக்கான நேர்காணல் இன்று துவங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கூட்டுறவு துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதன் பேரில் தமிழகம் முழுவதும் 2.3 லட்சம் பேர் இப்பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் மற்றும் 160 கட்டுனர்களுக்கான நேர்காணல் இன்று கூட்டுறவு அலுவலக வளாகத்தில் துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 6000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களுக்கான நேர்காணல் அழைப்பு காஞ்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 300 நபர்களும் மாலை 300 நபர்களும் என நாள் ஒன்றுக்கு 600 நபர்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்ப்பு , அதனைத் தொடர்ந்து நேர்காணலும் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க இரு நபர்கள் கொண்ட 12 பேர் குழு அமைக்கப்பட்டது.இதேபோல் இவர்களை நேர்காணல் செய்ய மூன்று பேர் கொண்ட பன்னிரண்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஏற்பாடுகளையும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் வழங்கி நேர்காணல் பணிகளை துவக்கினர்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ கூறுகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 114 விற்பனையாளர் பதவிகளும் , 160 கட்டுநர் பதவிகளும் இந்த நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இன்று துவங்கி இம்மாதம் 29ம் தேதி வரை இந்த நேர்காணல் பணிகள் நடைபெறும். இதில் தகுதி வாய்ந்த நபர்களே தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு செய்து தரப்பட்டுள்ளது.

நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் நடைபெறும் இடத்திற்கு செல்லும் விண்ணப்பதாரர்களை ஒழுங்கு முறையில் அனுப்ப கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேர்காணல் நடைபெறும் இடத்தில் விண்ணப்பதாரர்கள் அல்லாமல் யாரும் உள்ளே நுழையாத அளவிற்கு காவல் துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

இந்த நேர்காணலில் முதுநிலை பட்டதாரி உள்ளிட்ட பல உயர் கல்வி பயின்ற நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Updated On: 15 Dec 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!