காஞ்சிபுரத்தில் 583 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 583 நபர்களுக்கு, 8 கிராம் தங்கக்காசு மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 280 பட்டம்/பட்டயம் பயின்ற பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 50000ரூபாய் பணம் மற்றும் 303 - 10ம்/12ம் வகுப்பு பயின்ற பயனாளிகளுக்கு 8கிராம் தங்கம் மற்றும் 25000ரூபாய் பணமும் என மொத்தம் 583 பயனாளிகளுக்கு 4கோடியே 37 லட்சத்து 9ஆயிரத்து , இருநூற்று எழுபத்தி ஏழு ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சங்கீதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய துணைத்தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின், ஒன்றிய திமுக பொருளாளர் தசரதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.