கள்ளக் காதலுக்காக கணவனை எரித்துக் கொன்ற வழக்கில் மனைவி உட்பட நான்கு பேர் கைது
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கொத்தனார் மோகன்ராஜ் என்பவர் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த பவானி என்பவரை மூன்று வருடங்களுக்கு முன்பு இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் கொத்தனார் தொழில் புரிந்து வருகிறார்.
ஏற்கனவே இவர் மனைவியை பிரிந்த நிலையில் , கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த பவானி என்பவரை தொழில் நிமித்தமாக சந்தித்த நிலையில் , இருவரும் அதன் பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு திருக்காலிமேடு பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
மோகன்ராஜ் அடிக்கடி வெளியூருக்கு கொத்தனார் வேலைக்கு செல்வது வழக்கம் என்ற நிலையில் எதிர் வீட்டில் இருந்த மணிகண்டன் என்ற நபருடன் பவானிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து பவானியை பலமுறை மோகன்ராஜ் கண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து மணிகண்டனுடனான தொடர்பை துண்டிக்காமல் இருந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மது போதையில் மோகன் ராஜ் மனைவியுடன் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் நண்பரான ராஜேஷ் மற்றும் பவானியின் தங்கை கணவரான தயாளன் ஆகியோர் இருவரும் மோகன்ராஜ் தேடி அவரை குத்தி கொலை செய்து வையாவூர் பனந்தோப்பு அருகே தீயிட்டு கொளுத்தி எரித்து உள்ளனர்.
மோகன்ராஜ் தொழில் நிமித்தமாக வெளியே சென்று இருக்கலாம் என்று நினைத்திருந்த பெற்றோர்கள் கடந்த ஒரு வருட காலமாக தேடி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் மோகன்ராஜ் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர், பவானியை விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதை அறிந்த மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து கொலை செய்து சடலத்தை எரித்ததாகவும் , இதற்கு பவானி மற்றும் தயாளன் உடந்தை எனவும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மோகன்ராஜ் மனைவி பவானி , கள்ளக்காதலன் மணிகண்டன் அவரது நண்பர் ராஜேஷ் மற்றும் பவானியின் தங்கை கணவன் தயாளன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடிவேலு சினிமா பட நகைச்சுவை காட்சியில் வருவது போல், காதலனை மாற்றி அவ்வப்போது குடும்பம் நடத்தி வந்துள்ளார் பவானி.