/* */

குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வார்த்தைகள் பேசிய குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
X

குஷ்புவின் புகைப்படத்தை காஞ்சிபுரம் மாவட்ட திமுக மகளிரணியினர் தீயிட்டுக் கொளுத்த முயன்றனர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்புவின் புகைப்படத்தின் மீது செருப்பால் அடித்து காஞ்சிபுரத்தில் திமுக மகளிர் அணியினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார், இதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி செல்வி மற்றும் மேயர் மகாலட்சுமி தலைமையில் கச்சபேஸ்வரர் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து குஷ்புவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.


மேலும் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை கொண்டு வந்த திமுக மகளிர் அணியினர் கீழே போட்டு கிழித்து, செருப்பால் அடித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

குஷ்புவின் புகைப்படத்தை தீ வைத்து எரிக்க முயன்ற, திமுக மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மகளிர் அணியினர் பாஜக நிர்வாகி குஷ்புவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவரது உருவப்படத்தை அடித்தும் கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குஷ்புவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 March 2024 11:08 AM GMT

Related News