கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரியும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காஞ்சிபுரம் கட்டிட பொறியாளர் சங்கம், காஞ்சிபுரம் வர்த்தகர் சங்கம், இந்திய தேசிய கட்டிட தொழிலாளர் பேரவை, தமிழக கட்டிட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 சங்க அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த 6 மாத காலமாக கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுப்படுத்தி சாமானிய மக்களும் வீடு கட்டும் திட்டத்தில் பங்கேற்க வழிவகுக்க வேண்டும் .இதனால் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யும் என வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம் சாண்ட் விற்பனை விவகாரத்தில் டிராண்ஸ்ஸிட் பாஸ் பிரச்னையால் தட்டுபாட்டு ஏற்பட்டுள்ளது.. இதனால் மாவட்டத்தில் 50 சதவீத கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.