காஞ்சிபுரத்தில் தாயுடன் சேர்ந்து மகளும் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் அம்மா மீது கொண்ட அதீத பாசத்தால் உடல் உபாதையில் இருந்த தாயுடன் சேர்ந்து மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
சின்ன காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டு நிறுவன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் கவிதா மற்றும் புவனா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவரது மனைவி ரேணுகாவுக்கு அடிக்கடி உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார். இதைக்கண்ட இளைய மகள் புவனா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இன்று மதியம் ஒரு மணி அளவில் தனது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் புடவையில் ரேணுகா ஒருபுறமும் மற்றொரு புறத்தில் இளைய மகள் புவனாவும் ஒன்றாக இணைந்து கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதிய உணவிற்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் தனது உறவினர் ஒருவருடன் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு இருந்தது தெரியவந்தது.
கதவை உடைத்து இருவரையும் மீட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் மீது அதிக பாசம் கொண்டதால் அவரது உடல்உபாதையில் அவதிப்பட்டு வருவதை கண்டு தாயுடன் இணைந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.