/* */

காஞ்சிபுரத்தில் தாயுடன் சேர்ந்து மகளும் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரத்தில் அம்மா மீது கொண்ட அதீத பாசத்தால் உடல் உபாதையில் இருந்த தாயுடன் சேர்ந்து மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தாயுடன் சேர்ந்து மகளும் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

சின்ன காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டு நிறுவன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் கவிதா மற்றும் புவனா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மனைவி ரேணுகாவுக்கு அடிக்கடி உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார். இதைக்கண்ட இளைய மகள் புவனா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இன்று மதியம் ஒரு மணி அளவில் தனது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் புடவையில் ரேணுகா ஒருபுறமும் மற்றொரு புறத்தில் இளைய மகள் புவனாவும் ஒன்றாக இணைந்து கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதிய உணவிற்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் தனது உறவினர் ஒருவருடன் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு இருந்தது தெரியவந்தது.

கதவை உடைத்து இருவரையும் மீட்டு விஷ்ணு காஞ்சி காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் மீது அதிக பாசம் கொண்டதால் அவரது உடல்உபாதையில் அவதிப்பட்டு வருவதை கண்டு தாயுடன் இணைந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!