மாஸ்க் போட்டிருக்காங்களா?: சோதனையை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்
கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ளதால் மீண்டும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
HIGHLIGHTS
தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் துவங்கி தற்போது நாளொன்றுக்கு ஒரு சிலரே பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 50 நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறையுடன் கடந்த சில தினங்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதற்கு முன்பே கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினார்.
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிந்து பரவலை தடுக்க வேண்டும் எனவும் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவ்வழியாக வந்த முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முயன்ற போது எந்தவித எச்சரிக்கையும் விடாமல் திடீரென சோதனை மேற்கொண்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
அபராதமாக ரூ500 செலுத்த மாநகராட்சி ஊழியர் கேட்டபோது, இந்த ஒரு முறை எச்சரிக்கை செய்யுங்கள் அடுத்த முறை கட்டாயம் முகக்கவசம் அணிகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பொதுமக்கள் இது குறித்து முறையான அறிவிப்பு எந்த ஒரு செய்தித் தாளிலும் டிவியிலும் வரவில்லை என கூறி தப்பி சென்று விட்டனர்.