/* */

மாஸ்க் போட்டிருக்காங்களா?: சோதனை‌யை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்

கொரோனா பரவல்‌ மீண்டும் தொடங்கியுள்ளதால் மீண்டும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

HIGHLIGHTS

மாஸ்க் போட்டிருக்காங்களா?: சோதனை‌யை தொடங்கிய மாநகராட்சி ஊழியர்கள்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் துவங்கி தற்போது நாளொன்றுக்கு ஒரு சிலரே பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 50 நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறையுடன் கடந்த சில தினங்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதற்கு முன்பே கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினார்.

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிந்து பரவலை தடுக்க வேண்டும் எனவும் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவ்வழியாக வந்த முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முயன்ற போது எந்தவித எச்சரிக்கையும் விடாமல் திடீரென சோதனை மேற்கொண்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

அபராதமாக ரூ500 செலுத்த மாநகராட்சி ஊழியர் கேட்டபோது, இந்த ஒரு முறை எச்சரிக்கை செய்யுங்கள் அடுத்த முறை கட்டாயம் முகக்கவசம் அணிகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பொதுமக்கள் இது குறித்து முறையான அறிவிப்பு எந்த ஒரு செய்தித் தாளிலும் டிவியிலும் வரவில்லை என கூறி தப்பி சென்று விட்டனர்.

Updated On: 27 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!